Quantcast
Channel: தமிழ் – Gnana Boomi
Viewing all articles
Browse latest Browse all 32

ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் –சாது ஏகரஸ

$
0
0

To read the English version of this post, click here.

சாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு மஹரிஷியிடம் ஆழமான பக்தி ஏற்பட்டது.

கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) அவர்கள் வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே (Wen-Poh-Hsuche-Tse) அவர்களைச் சந்தித்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ட்ஸே-லு அவரிடம், “மாஸ்டர், தாங்கள் வெகு நாட்களாக வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே வை சந்திக்க விரும்பினீர்கள், ஆனால் இப்போது அவரைக் கண்டபின் ஏன் ஒரு வாத்தை கூட பேசவில்லை?” என கேட்க, கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) “இவரைப் போன்றவர்களை வெறுமனே பார்த்தாலே போதும், பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை. இவரைப் பற்றிய அனுபவம் ஏற்பட ஒரு முனிவரை சந்தித்திருக்க வேண்டும்” என்றார்.

மஹரிஷியை முதன்முதலில் பார்த்த போது அதே அனுபவம் ஏற்பட்டது எனக்கு, ஒருமுறையல்ல, மறுபடி மறுபடி நான் அங்கு சென்று அவரைப் பாக்கும்போதெல்லாம், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அங்கு நான் அவருடன் எந்தத் தடையுமின்றி தங்கியிருந்த மூன்றாண்டுகள். பலர் பல முறை என்னிடம் கேட்டுக் கொண்ட போதும் அவரைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு வெகு கடினமாய் இருப்பதும் மேல்சொன்ன இதே காரணம் தான். தன்னில் தான் ஆழ்ந்து இருக்கும் ஒரு முனிவரைப் பற்றி செயிண்ட் டியானிசியஸ் சொன்னது நன்கு பொருந்துகிறது, “கடவுளைப் பற்றி நீர் சொல்வது அனைத்தும் பொய். கடவுள் என்பவர் சொற்களுக்கு அப்பாற்ப்பட்டவர். எனவே நீர் கடவுள் பற்றி சொல்வது அனைத்தும் வேறெதையோ தான் குறிக்கிறது.” எனவே இந்தியாவில் யாரேனும் என்னை மஹரிஷி பற்றி பேசவோ எழுதவோ சொன்னால் அவர் மஹரிஷியை சந்தித்து தானே பார்த்துக் கொள்ள வெண்டியது தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலைநாட்டினர் என்னிடம் அடிக்கடி கேட்பது இன்னொன்று: “மஹரிஷி என்னதான் செய்வார்?” இதற்கு ஒருவேளை இப்படி பதில் சொல்லலாம், “அவருடைய தினப்படி வேலை அவர் அவராகவே இருப்பது மட்டுமே”. ஏனெனில் அவர் இவ்வேலையில் மிகவும் வெற்றியடைந்தவராய் இருக்கிறார், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார். அவர் தரும் மாற்றம் என் போன்றவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒன்றும் ‘செய்யாமல் செய்வது’ இதைத் தான். இவருக்கு முன்னால் இப்பூமியில் வாழ்ந்த ‘தி க்ரேட்’ கள் அனைவரும் ஏதோ ஸ்கூல் பையன்கள் மாதிரி தெரிகிறார்கள். மைசூரின் மறைந்த மஹாராஜா அவர் முன் பவ்யமாக மண்டியிட்டு, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்கிக் கொண்டு ஏதும் அசைவற்று நின்று கொண்டிருந்தார். பின் மற்றொரு முறை தண்டனிட்டு விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெளியேறினார்.

ஒரு மனிதன் உலகில் செயற்கரிய செயல் எதையேனும் செய்து விட்டு மஹரிஷி முன் வந்தமர்ந்தால் அவர் உணரும் விஷயம், மஹரிஷியின் தன்னைத் தான் உணர்ந்து அதில் லயித்திருக்கும் செயலுக்கு முன்னால் தான் செய்தது ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகும்.

யாரேனும் உலகிலேயே மிகச்சிறந்த புத்தகமொன்றை எழுதி விட்டு அதை மஹரிஷிக்கு சமர்ப்பிக்க வந்தால் மஹரிஷியே ஒரு பெரும் புத்தகம் என்பதையும், அது எழுத்தாணியோ, இங்க்கோ பேப்பரோ இன்றி, எந்தவித முயற்சியுமின்றி, யாரும் நடுநிலை வகிக்கத் தேவையின்றி, ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வருபவர் விரும்பினால் படிக்க இயலும் பெரும் புத்தகம் என்பதையும் அறிவார்.

மற்றைய பெரியோரிடத்தில் சொல் மற்றும் செயல், ஆன்மிகம், புத்திகூர்மை ஒருபுறமும் செயலாற்றல் என்பது மறுபுறமும் இருப்பதை எளிதாகக் காணலாம். மஹரிஷியிடம் ஆனால் இத்தகைய வேறுபாடுகள் இருந்ததேயில்லை.

மஹரிஷி காலம் என்பதைக் கடந்தவர். அவரின் நிலைத்த தன்மை அவர் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பார்வையிலும் தனித்துவமாக தெரிகிறது. அத்தன்மை அவரை நாடி வந்து அவரிடத்தில் இருக்கும் அனைவருடைய அந்தராத்மாவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அத்தன்மை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் வெகு சொற்பமாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. பின் வேறெப்படி இருக்குமது? யாரால் விளக்க முடியும் உண்மையை, கடவுளை? ஒரு வேளை முடிந்தாலும் கடவுளின் மைந்தனை, உண்மையில் ஸ்வரூபத்தை எவ்வாறு விளக்க முடியும்?

பல்வேறு சன்யாசிகளையும், முனிவர்களின் வாழ்வு, போதனைகள் பற்றி படித்தபின் மிகத் தெளிவாகத் தெரிவது ரமண மஹரிஷி இவர்களில் தனித்து நிற்கிறார் என்பதே. கடவுளின் சாக்ஷாத்காரம் என்பதை எவர் ஒருவரும் கடவுளின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அடைந்ததில்லை. ஸ்ரீ ரமணருக்கு ‘தீக்ஷை’ அருணாச்சலம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கிடைத்துவிட்டது, அதுவும் அச்சொல் ஒரு பயணம் பற்றிய விவரத்தைச் சொல்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது.

ஸ்ரீ ரமணர் தன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அப்படி ஒரு பாரம்பரியம் அடைய இருக்கிறது என்று யாரும் சொல்லாமலேயே அடைந்து விட்டார். குரு, இருளை அகற்றுபவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் ஆகிறார் ரமணர். அவருடைய வழிமுறையானது மிக மிக நேரானது, ஏனெனில் அது மிக எளிதானதும். அப்படி நேராக, மிகத் தெளிவாக இருப்பதாலேயே பலருடைய கவனத்திலுமிருந்து அது எளிதாக விலகி விடுகிறது. அவரை நாடி வருபவர்கள் வேறெதையோ, ஏதோ நிச்சயமான ஒன்றைத் தேடி வருகிறார்கள், அதுவே நிச்சயமற்றதாய் விடுகிறது. அவர்களுக்கு தங்களுடைய நிஜ ஸ்வரூபத்தை அறியச் செய்யும் தீக்ஷைக்கும் தமக்கும் நடுவே தாங்களேதான் தடையாக நிற்கிறார்கள் என்பதை அறிவதில்லை.

மஹரிஷியிடம் பல முறை அவர்கள் தீக்ஷை, அருள், ஆன்மிக அனுபவம், கருணை முதலியவற்றைத் தருமாறு வேண்டுவதுண்டு, அதற்கு அவர் “நான் இவற்றை எப்போதும் தந்து கொண்டுதான் இருக்கிறேன், அதை நீங்கள் உணர முடியாமல் நான் என்ன செய்வது?” என்று சொல்வதுண்டு.

பல குருமார்கள் தங்களை ஆன்மீக மேன்மையை எப்போதும் கருத்தில் கொண்டவர்களாக இருப்பதைப் போல் அல்லாமல் மஹரிஷி அனைவரிடத்திலும் அவர்களுக்கே தெரியாமல் இருந்த போதிலும் அவர்கள் கடவுளின் உள் ஒளியைத் தங்களுக்குள் கொண்டவர்களாக இருக்கும் எதிர்கால ஞானிகள் என்றே கருதினார். அவர் கூறிய சில வார்த்தைகள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹுயி நெங்க் சொன்னதுடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள் – “புத்தருக்கும் சாதாரணமானவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அவர் உணர்ந்ததை (realizes) இவர் தூக்கியெறிந்து (discards) விடுகிறார் என்பதே”. மஹரிஷி கூறுவது: ஆன்மீகப் பாரம்பரியம் என்பது எப்போதும் உள்ளதே, அதை ஸ்வீகரித்துக் கொள்வதற்காக அது காத்துக் கொண்டிருக்கிறது, கடவுள்-தன்மை அனைவரின் இதயத்திலும் உள்ள ஒன்று தான்.

சாதாரணமான மனிதர் மஹரிஷியைக் கண்டு பரிதாபப்படக் கூடும், அடடா வாழ்க்கையின் அவ்வளவு சுகங்களையும் இவர் இப்படி பார்க்காமல் இருக்கிறாரே என்று. மஹரிஷி ஆனால் இம்மனிதர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார் – இவர்களுக்கு நிஜமான சுகம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்று!

ஓய்வின்றி, சதா மாற்றம் மற்றும் அசைவில் திளைத்து உளையும் ஒரு உலகாயத மனதிற்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பது என்பதே ஒரு அசகாய செயல் போலத்தான் தெரிகிறது. இது ப்ரத்யேகமானதும் கூட. ஆனால் மஹரிஷி இதையெல்லாம் எந்த அசகாயத்தனத்திலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. அவர் உலகின் காந்தத்தை, தன் இதயத்தின் மையத்தைத் தன்னகத்தே கொண்டு, தன் தந்தையான அருணாச்சலேஸ்வரர் போலவே அசைவற்றவராகி விட்டார்!

சாது ஏகரஸவின் கவிதைகளில் இருந்து:

ஸ்ரீ ரமணருக்கு இதயத்தின் அஞ்சலி

ஒப்பாரில்லாத, அனைவரின் தாய்-தந்தையுமான மஹரிஷிக்கு
எவரில் சிவமும் சக்தியும் என்றும் ஆனந்தத்தில் இணைந்திருக்கிறதோ
எவரின் இருப்பு இதயத்தை மகிழ்விக்கிறதோ,
எவருடைய லீலை அனைவரின் ஆச்சர்யமாக இருக்கிறதோ –
அவருக்கு மனம், இதயம், உடம்பு – படைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம்!

***

எதிர்கால சந்ததியினர் ஒருக்கால்
மஹரிஷியின் ப்ரத்யேகம் என்னவென்று
நான் சொல்வேன்; எதுவாயினும், அது நிச்சயத்தன்மை;
அசைவற்ற பாறை தரும் பாதுகாப்பு போல,
புயலால் தாக்குண்டும் அசைவற்றிருக்கும் கடல் போல,
கம்பீரமான மெளனத்துடனிருக்கும் மாமலை போல,
தத்துவங்களாலும் கொள்கைகளாலும் சதா அலையுறும் உலகில்,
ஆம், உண்மையில் நீரே ‘அருணாச்சலத்தின்’ முனிவரே!

***

The post ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – சாது ஏகரஸ appeared first on Gnana Boomi.


Viewing all articles
Browse latest Browse all 32

Latest Images

Trending Articles





Latest Images