Quantcast
Channel: தமிழ் – Gnana Boomi
Viewing all articles
Browse latest Browse all 32

ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 –திலிப் குமார் ராய்

$
0
0

To see the English version of this post, click here.


8 – திலிப் குமார் ராய்

அரவிந்த ஆஸ்ரமத்தின் திலிப் குமார் ராய் அச்சமயத்தில் வெகு பிரபலமானவராயும் பல புத்தகங்களை எழுதியவராயும் இருந்தார். அவர் ஒரு பக்தர், இசையாளர். அவர் ஸ்ரீ ரமணரிடம் அவர் ஞானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தியை தள்ளுபவரா என்று கேட்டதற்கு பகவான் “பக்தியே ஞானமாதா” என்று பதிலுரைத்தார்.

“நான் அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தபோது முதன்முறையாக ரமண மஹரிஷி பற்றிக் கேள்வியுற்றேன். அவர் பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டபோது அவர் ரமணர் யோகிகளில் மிக சக்தி வாய்ந்தவர் என்றும் அவருடைய தபஸ் இந்தியாவுக்கு பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது என்றும் பதில் எழுதினார். மற்றொரு சமயம் அரவிந்தர் ரமணரை “யோகிகளில் ஹெர்குலிஸ்” என்று விளித்தார். எனவே நான் ரமணாஸ்ரமம் செல்ல வெகு ஆவலாயிருந்தேன்.

ஆஸ்ரமம் வந்த போதோ எனக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் குருநாதரின் பாதங்களில் என்னால் அடைய முடியாத அமைதியை மஹரிஷியிடம் எவ்வாறு அடைய முடியும்? என் குருவானவரும் சாதாரணமானவரில்லையே? இருந்தபோதிலும் நானே என் செயலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன், நான் ஞானம் தேடி வந்திருப்பவர் ஆன்மிகப் பாதையில் எவ்வகையினராக இருந்தாலும் அவர்கள் மிக உயர்வுடன் குறிப்பிடப்படும் மஹரிஷியாவார்.

நான் அம்மஹா முனிவர் அமர்ந்திருந்த ஹாலுக்குள் நுழைந்தேன், அவர் அங்கே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார், அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டு, அனைத்திலும் ஆர்வமுடையவராகவும் எதிலுமே பந்தமில்லாதவராகவும் இருந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எனக்கு சிவபெருமானின் அடையாளம் தெரிந்தது, கருணையின் மொத்த உருவமும், ஆனந்தமயமானவராகவும், எதிலும் அடங்காதவராகவும், அனைத்திலுமிருப்பவராகவும் இருக்கும் அந்த மஹாதேவனின் சாயல் தெரிந்தது. என்னை பெருவியப்பிலாழ்த்தியது நான் கண்டதா அல்லது உணர்ந்ததா என்று பேதப்படுத்துவது எளிதாக இல்லை. இதோ ஒருவர் கடவுளைப் போலவே வாழ்கிறார், நாம் எதன் பின்னாலெல்லாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமோ அவைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாதவராய், வெறும் கெளபீனம் அணிந்திருந்தபோதும் அவரிடத்தில் இருந்த அமைதியும் தானென்ற உணர்வற்ற ஆனந்தமும் பெரும் அணிகலனாய் திகழ்ந்தது. அவைகளைப் பற்றி நாம் பேச வேண்டுமானால் செய்யலாம், உணர்வது?

நான் அவருடைய பாதங்களைத் தொட்டு பின் உடனே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தேன். என் இதயம் வினோதமான ஆனந்தத்தில் ஆழ ஆழ மூழ்கிக் கொண்டிருந்தது, பலப்பல மணி நேரங்களுக்கு. வார்த்தையால் விவரிப்பது என்பது முடியவே முடியாத, தெளிவான, ஒரே சீரான, வெகு அடர்த்தியான நேரடி ஆன்மிக அனுபவம்!

அமைதியின் தாலாட்டுதலில் நான் ஒரு ஈஸி சேரில் நட்சத்திரங்களுக்கு அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தது போலிருந்தேன், கண்களில் ஆனந்த பாஷ்பமாய் கண்ணீருடன். ஸ்ரீ ரமணரிடம் பெரிதும் நன்றிக் கடன் பட்டவனாயிருந்தேன். அவர் சொன்ன ஒரு ஆழமான சொல்லை நினைந்தேன், “அப்படியே இரு. அனைத்தும் உன்னுள் இருக்கின்றன, ஒரே ஒரு திரை மட்டும் தான் நடுவில் உள்ளது. நீ செய்யவேண்டியது அத்திரையை நீக்குவது மட்டுமே, அதன் பின், அப்படியே இரு.” இது நாள் வரை இந்த உபதேசத்தை ஒரு மர்மமான, புரியாத ஒன்றாய் நினைத்திருந்தேன். இப்போது முதன்முறை அதன் ப்ரத்யக்ஷம் எனக்கு நேர்ந்தது. மஹரிஷி பற்றிய கவிதை ஒன்றையும் எழுதி என் வணக்கத்தைச் செலுத்தினேன்.

மஹரிஷியின் தன்னுள் தானிருந்து சுற்றி நடப்பது எதுவும் பாதிக்காத தன்மை என்னை மிகவும் வசீகரித்தது. சூரிய அஸ்தமனத்தின் மேகம் போல அழகு போல மேன்மை அவரிடம் வெகு எளிதாக அமர்ந்திருந்தது, ஆனால் தூக்கியடிக்கும் அளவிற்கு. ஒரு பெரியவரான ஒருவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற நம் கணிப்பு, எண்ணம் அனைத்தையும் வார்த்தைகளற்ற வெறும் புன்னகையால் கரைத்து ஒன்றுமில்லாதவைகளாக்கி விடுகிறார். நான் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் அவரை தினம் தினம் கண்டு வந்தேன், தனித்துவம் வாய்ந்த இவர் போல மற்றொருவர் இந்தப் பரந்த உலகில் வேறெங்கும் காணக் கிடைக்க மாட்டார்.

என் வாழ்வில் நான் கண்ட பலவித அனுபவங்கள், விரிவான பிரயாணங்களில் இவரைப் போல வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அதே சமயம் மிக மிக சக்திவாய்ந்த மாற்றத்தை உருவாக்குபவருமான யாரையும் நான் கண்டதேயில்லை. அவர் கண்களில் எந்த பந்த-பாச உணர்வும் தெரிவதில்லை, ஆனால் அக்கண்கள் என்னைக் காண்கையில் என்னை என்னுள் ஆழச் செலுத்தி வெகு உன்னதமான ஆனந்தத்தை அளிக்கும் அமைதியை நான் உடனே உணர்ந்தேன்.

அவரிடம் எந்த வித சுய தம்பட்டமோ நடிப்புகளோ துளிக் கூட இல்லை. அவர் யாரையும் எவ்விததிலும் ‘போதனைகளாலோ’ கட்டுப்படுத்தவேயில்லை.

நான் கண்ட இம்மஹரிஷி வெளிப் பார்வைக்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கான எதுவுமே கொண்டவர் அல்ல எனினும் – அதை எப்படிச் சொல்ல – அவர் எவ்வளவு பாதிக்கிறார் நம்மை! அவருடைய ஆசாரமான அதே சமயம் வெகு கனிவான முகத்தை மின்சார விளக்கின் ஒளியில் கண்ட போது என் மனது எப்படி ஆழமாக கிளர்ந்து எழுந்தது என்பதை நான் மறக்கவே முடியாது. பால் ப்ரண்டன் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிடுகிறது, “இந்த மனிதர், இம்மஹரிஷி, ஆன்மிக அமைதி என்ற நறுமணத்தை மலர்கள் அதனுடைய இதழ்களில் இருந்து வெளிவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறாரா?”

அவர் முன்னிலையில் பாடல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாடினேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கனிவான புன்சிரிப்புடன் கூடிய பார்வை என்னைக் கவர்ந்து கொண்டேயிருந்தது. முதன் முறையாக நான் அவ்வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டேன் – புனிதம்!

கவிதைகளில் சில:

ஸ்ரீ ரமணருக்கு,

விடியலின் செல்வனே! சூரியனை மட்டும்
ஞானத்தின் கண்கள் கொண்டு அனைத்தையும் –
அனைத்தும் வெளிபடுத்தப் பட்டுக் காண்பவனே
சூரியனின் புதல்வர்கள் மட்டுமே உணரக்கூடிய
குறையேதும் இல்லாத நிறைவே!

தேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே இவ்வுலகின்
காயங்களுக்கும் அழுகைகளுக்கும் பின்
பளிச்சிடும் அவ்வுண்மையைக் கண்டவராகிறார்;
மிகவுயர்ந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் – உண்மையின் ஸ்வரூபமான –
யார் உமைக் காண்கிறாரோ
அவர் கணநேரமாயினும் அனைத்துங்கடந்த ஆனந்தத்தை அனுபவிப்பர்.
நீர் பாடுகிறீர் – ‘இல்லை, அது இங்கே இப்போதே இருக்கிறது’ என்று –
இருப்பினும் ஐயா உமது கருணையின்றி – அச்சிலரும் எவ்வாறு உணர்ந்திடுவார்?
தெளிவெனும் இசைவாணரே, உமக்கு என் அஞ்சலி!

ஆங்கில மூலம்:

To Sri Ramana Maharshi

O Son of Dawn! Who only knowest the Sun,
And through His eyes of Light see’st all that lies
Revealed – a flawless Plentitude which none
But Sun’s own children ever might surmise!

For only the chosen few so far have won
The Truth that shines beyond world’s wounds and cries;
Who see Thee, throned in the high dominion
Of Self’s invulnerable Verities,
Enjoy a glimpse of Bliss of the Beyond.
Thou singest: ‘Nay, ‘tis here’ – yet without Thy
Compassion’s pledge – how few would understand?
Homage to Thee, O minstrel of Clarity!

The post ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 – திலிப் குமார் ராய் appeared first on Gnana Boomi.


Viewing all articles
Browse latest Browse all 32

Latest Images

Trending Articles





Latest Images